icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

அம்மா சொத்து யாருக்கு சொந்தம்?

view 483 Views

3

9 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-11-13T09:51:24+00:00

அம்மா சொத்து யாருக்கு சொந்தம் என்பது, அவர் விருப்பத்தையும், உயில் (Will) எழுதி வைத்திருக்கிறாரா என்பதையும் சார்ந்தது. அவர் உயில் எழுதவில்லை என்றால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, அந்தச் சொத்து அவருடைய கணவர், பிள்ளைகள் மற்றும் பெற்றோர் ஆகிய சட்டப்படி உரிமை உள்ளவர்களுக்குப் பங்காகப் பகிரப்படும்.

அம்மாவின் சொத்து யாருக்கு?

  1. கணவரும், குழந்தைகளும் இல்லாத ஒரு பெண்ணுக்கு தந்தையிடமிருந்து வந்த சொத்து இருந்தால், அவர் உயில் எழுதாமல் உயிர் இழந்துவிட்டால், அந்தச் சொத்து தந்தையின் குடும்பத்தினருக்கே (அதாவது தந்தையின் வாரிசுகளுக்கே) திரும்பும்.

  2. அதேபோல், கணவர் அல்லது மாமனார் வழியாக வந்த சொத்து என்றால், அவர் உயில் எழுதாமல் உயிர் இழந்துவிட்டால், அது கணவரின் குடும்பத்தினருக்கே (அவரது வாரிசுகளுக்கே) செல்லும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நோப்ரோக்கர் சட்ட நிபுணர்களின் உதவியுடன் உங்கள் ஆவணத்தைப் பரிசீலிக்கவும்.

0 2025-06-02T15:35:52+00:00

சமீபத்தில் நான் ஒரு வழக்கறிஞரை சந்திக்க சென்றேன். அவரிடம் சொத்து விஷயமாக பல கேள்விகளை கேட்டறிந்தேன். அப்போது அம்மா சொத்து யாருக்கு சொந்தம் என்றும் கேட்டேன். அவர் அதற்கு அம்மா யாருக்கு உயில் அல்லது செட்டில்மென்ட் எழுதி வைத்திருக்கிறாரோ அவருக்கே சொந்தம் என்று கூறினார். மேலும் அம்மாவின் சொத்துக்களை யாரெல்லாம் சொந்தம் கொண்டாடலாம் என்றும் அவர் விவரித்தார். அதை நான் உங்களுக்கு இப்போது கூறுகிறேன்.

அம்மா பெயரில் இருக்கும் சொத்துக்கள் யாருக்கு?

அம்மா உயில் அல்லது செட்டில்மென்ட் யார் பெயரில் எழுதி வைத்திருக்கிறாரோ அவருக்கே சொத்துக்கள் சேரும். ஒருவேளை அவர் செட்டில்மென்ட் எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி சொத்துக்கள் வழங்கப்படும்.


அம்மாவின் சொத்துக்கள் யாருக்கு

  1. அம்மா தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் அல்லது செட்டில்மென்ட் மூலம் எழுதி வைக்கலாம். அப்படி எழுதி வைத்தால் அதை யாராலும் மாற்ற முடியாது.

  2. பூர்வீக சொத்துக்கள் என்றால் மகன், மகள் இருவருக்கும் சம பங்கு குடுக்க வேண்டும்.

சட்ட பிரிவு 15 இன் படி, ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பிறகு அவரது சொத்தை பின்வரும் நபர்கள் வாரிசாகப் பெறுவார்கள்

  1. அவளுடைய குழந்தைகள்

  2. முன்னரே இறந்த குழந்தைகளின் குழந்தைகள்

  3. கணவர்

  4. உடன் பிறந்தவர்கள்

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நோப்ரோக்கரின் சட்ட நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் உங்கள் விவரங்களை சரிபார்க்கவும் 

Read More:

Can daughter claim mother's self acquired property?

 

0 2025-05-15T08:35:17+00:00

எனது தம்பி சமீபத்தில் அம்மா சொத்து யாருக்கு சொந்தம் என்று என்னிடம் கேட்டான். நான் அவனிடம் அம்மா யாருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறாரோ அவருக்கே சொத்து என்று கூறினேன். ஆனால் அதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. பொதுவாக அம்மாவின் சொத்து மகள்களுக்கு என்று கூறுவார்கள், அப்படி ஒன்றும் கிடையாது. சட்டப்பூர்வமாக அந்த சொத்து யாருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதோ அது அவர்களுக்கே சொந்தம். 

அம்மா பெயரில் உள்ள சொத்து யாருக்கு?

அம்மா தரப்பில் இருந்து செட்டில்மென்ட் யாருக்கு செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கே அந்த சொத்து போய் சேரும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். மகள், மகன், பேரன், பேத்தி, கணவன், இல்லையெனில் மற்ற உறவுகளுக்கு கூட சொத்தை எழுதி வைக்கலாம்.

  1. அதுமட்டுமின்றி உயிலில் ஒரே இடத்தை வீட்டில் இருக்கும் மகள், மகன் இருவரும் சரிபாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தால் அதன்படியே நடக்க வேண்டும்.

  2. உயிலில் முக்கியமாக ஒரு விஷயம் என்னவென்றால் எழுதிய உயிலை பத்திரத்தில் பதிவு செய்தாலே அது செல்லுபடியாகும்.

  3. இதுமாதிரி பல விஷயங்களை உள்ளடக்கியே சொத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறன் 

நோப்ரோக்கரின் சட்ட நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் உங்கள் பத்திரத்தை சரிபார்க்கவும்

Read More:

What are the Son’s Rights on the Mother’s Property

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners