icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

தாத்தா சொத்து யாருக்கு சொந்தமானது?

view 162 Views

1

5 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-06-24T10:44:39+00:00

தாத்தா சொத்து யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி எனக்கும் எழுந்தது. அதனால் நான் அதனை பற்றி தெரிந்துகொள்ள ஆன்லைனில் தேடினேன். அதே தேடுதலில் தாத்தாவிடம் இருக்கும் சொத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் என்று தெரியவந்தது. ஒன்று பூர்வீக சொத்து மற்றொன்று சுயமாக சம்பாதித்தது சேர்த்த சொத்து. இதில் பூர்வீக சொத்து என்றால் கிட்டத்தட்ட நான்கு தலைமுறையாக பிரிக்கப்படாமல் வரும் சொத்தை பூர்வீக சொத்து என்பார்கள். அந்த சொத்து அவரின் மகனுக்கும் அவரை தொடர்ந்து பேரனுக்கும் சேரும். இதுவே சுயமாக வாங்கிய சொத்து என்றால் அது அவர் யாருக்கு உயில் எழுதி வைக்கிறாரோ அவருக்கே செல்லுபடியாகும். 

தாத்தாவின் சொத்து முறைப்படி யாருக்கு செல்லுபடியாகும்?

  1. முன்பே கூறியது போல் பூர்வீக சொத்து வாரிசுகளுக்கே சேரும்.

  2. தாத்தாவின் உழைப்பில் வாங்கிய சொத்தை அவர் யாருக்கு உயில் எழுதி வைக்கிறாரோ அவருக்கே சேரும். உதாரணத்திற்கு அவரின் மனைவி, மகன், மகள் அல்லது பேரன் ஆகியோருக்கு சேரும்.

  3. அவர் வாரிசு அல்லாதவர்களுக்கு எழுதி வைத்திருந்தால் அதுவும் சட்டப்படி செல்லுபடியாகும்.

  4. மேலும், பேரனுக்கு உரிமை உள்ளதா என்று கேட்டால் கண்டிப்பாக பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது.

  5. ஒருவேளை உயில் எழுதி வைப்பதற்கு முன் அவர் இறந்துவிட்டால் சட்டப்பூர்வமாக சொத்தில் சமமான பங்கு அந்த குடும்ப வாரிசுகளுக்கு கிடைக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு ஒரு தெளிவான தகவலை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.

சொத்து சம்மந்தமான ஆவணங்களை நோபுரோக்கர் லீகல் நிபுணர்கள் மூலம் சரிபாத்துக்கொள்ளுங்கள்.

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners