icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம்?

view 258 Views

2

4 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-11-01T09:28:05+00:00

நான் தற்போது சட்டம் படித்து வருகிறேன். வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் என்று எனக்கு தெரிந்த வரை உங்களுக்கு கூறுகிறேன். வாரிசுகள் இல்லாத சொத்து முதலில் அரசுக்குச் சொந்தமாகிவிடும். இருப்பினும், உயில் எழுதப்பட்டிருந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்குச் சொந்தமாகும்.

வாரிசு இல்லாதவர்களின் சொத்து யாருக்கு சொந்தம்?

  1. யாருடைய பெயரில் உயில் எழுதப்பட்டிருந்தால், அந்தச் சொத்து அவருக்கு சொந்தமாகும். உயில் இல்லாவிட்டால், சட்டப்படி அடுத்த உரிமையுள்ள வாரிசுகளுக்கு சொத்து செல்லும். 

  2. சிலர் தங்கள் சொத்துக்களை கோயில்கள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு உயில் மூலம் அளிக்கலாம். ஆனால் அதை சட்டபூர்வமாக செய்யப்பட வேண்டும். 

  3. தனிப்பட்ட முறையில் அந்தச் சொத்தை விற்கவோ அல்லது வேறு சொத்து வாங்கவோ முடியும். ஆனால், சரியான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இதுவே எனக்கு தெரிந்த தகவல். இது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு தெளிவை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் சொத்து விவரங்களை சரிபார்க்க நோபுரோக்கர் வழக்கறிஞரை அணுகவும்.

0 2025-07-24T18:40:46+00:00

நான் ஒரு வழக்கறிஞர். என்னிடம் வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் என்ற கேள்வி பலமுறை கேட்கப்பட்டுள்ளது. முதலில் இந்த வாரிசு இல்லாதவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். திருமணமாகியும் குழந்தை இல்லாதவர்கள். திருமணமே செய்யாதவர்கள் என்று இரு பிரிவாக பிரிக்கலாம். இந்த இரு பிரிவுக்குமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வகையில்தான் அவரின் சொத்துக்கள் வழங்கப்படும். அதைப்பற்றிய விவரங்களை நான் உங்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன்.

வாரிசு இல்லாத சொத்துக்கள் யாருக்கு கிடைக்கும்?

  1. முதலில் ஒருவர் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் அவரின் இறுதி காரியம் செய்யும் நபருக்கே அவரின் சொத்துக்களை வழங்குவதை ஊர் வழக்கமாக உள்ளது.

  2. திருமணமான தம்பதியர் குழந்தை இன்றி தத்து பிள்ளைகளை வளர்த்தால் அவர்களின் சொத்துக்கள் அந்த பிள்ளைக்கே சேரும். இல்லையெனில் அவர்கள் யாருக்கு அவர்களின் சொத்தை எழுதி வைக்கிறார்களோ அவர்களுக்கே சேரும்.

  3. வாரிசு இல்லா சொத்துக்கள் ஆணின் பெயரில் இருந்தால் அது ஆணின் சொந்தங்களுக்கே சேரும். பெண்ணின் பெயரின் சொத்துக்கள் இருந்தால் அந்த சொத்துக்கள் பெண்ணின் சொந்தங்களுக்கே சேரும்.

இப்படியான வகையில் வாரிசு இல்லாத சொத்துகள் பிரித்து வழங்கப்படுகிறது.

உங்களின் சொத்து ரீதியான பிரச்சனைகளை சரிசெய்ய நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை அணுகுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners