icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பவர் பத்திரம் என்றால் என்ன?

view 225 Views

2

4 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-11-01T09:38:28+00:00

பவர் பத்திரம் (Power of Attorney - PoA) என்பது ஒரு நபர், மற்றொரு நபருக்கு தன்னுடைய சார்பில் சில சட்டபூர்வ நடவடிக்கைகளை செய்ய அதிகாரம் வழங்கும் ஆவணம் ஆகும். இதன் மூலம் அந்த நபர் (முகவர்) சொத்து, வங்கி, ஒப்பந்தம் போன்ற விஷயங்களில் அதிகாரம் பெற்றவராக செயல்பட முடியும். உங்களுக்கு மேலும் பவர் பத்திரம் என்றால் என்ன என்பதை பற்றி நான் கூறுகிறேன்.

  1. இந்த ஆவணம், சொத்தை நிர்வகித்தல், விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல், அல்லது சட்டபூர்வ பணிகளைச் செய்தல் போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 

  2. இது சொத்து தொடர்பான அனைத்து செயல்களுக்கும், உதாரணமாக விற்பனை, வாடகை, அல்லது சட்ட நடவடிக்கைகள், அதிகாரம் வழங்கும் ஆவணம் ஆகும். சில நேரங்களில், இது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக மட்டுமே அதிகாரம் அளிக்கப்படலாம்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சட்ட ரீதியாக உங்கள் சொத்துக்களை சரி செய்ய நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை அணுகுங்கள் 

0 2025-07-24T18:36:41+00:00

பொதுவாக பவர் பத்திரம் என்றால் என்ன என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. பவர் பத்திரம் என்பது ஒரு இடத்தின் உரிமையாளர் அந்த இடத்தின் பவரை அவருடைய நண்பருக்கோ, சொந்தங்களுக்கோ இல்லை தெரிந்தவருக்கோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பவர் எழுதி கொடுப்பது. இதுவே பவர் பத்திரம் என்று கூறுவர். இப்படியான நிலையில் பவர் கொடுக்கப்பட்ட நபர் அந்த சொத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பவர் பத்திரம் இரண்டு ஆண்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற நிலையில் உரிமையாளர் நினைத்தால் அதனை கேன்சல் செய்ய முடியும்.

பவர் பத்திரம் இரண்டு வகை என்னென்ன?

  1. பவர் பத்திரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று பொது அதிகார பத்திரம். மற்றொன்று குறிப்பிட்ட அதிகார பத்திரம்.

  2. இந்த பொது அதிகார பத்திரம் பத்திரத்தில் எத்தனை காலம் இந்த பவர் பத்திரம் செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்காது. அப்படியான சூழலில் பவர் பத்திரம் உரிமையாளர் கேன்சல் செய்யும் வரை செல்லுபடியாகும்.

  3. ஒருவேளை உரிமையாளர் இறந்துவிட்டால் அந்த பவர் பத்திரம் அதுவாகவே கேன்சல் செய்யப்படும்.

  4. குறிப்பிட்ட அதிகார பத்திரத்தில் எந்த ஆண்டு வரை என்று கால நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் அதற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.

இதுவே பவர் பத்திரத்தின் ஒருசில விஷங்கள். இந்த விவரங்கள் பவர் பாத்திரம் என்றால் என்னவென்றே கேள்விக்கு பதில் அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் சொத்து விவரங்களை சரிபார்க்க நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை அணுகுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners