பட்டா உங்களிடம் இருந்து பத்திரம் இல்லை என்றால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, பத்திரம் தொலைந்ததாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்வதாகும்; அதன்பிறகு, பதிவுத்துறை அலுவலகத்தில் (Sub-Registrar Office) விண்ணப்பித்து, பத்திரத்தின் நகலை (Certified Copy) பெறுவதுதான் சரியான வழியாகும்.
FIR நகலை எடுத்துக் கொண்டு, உங்கள் பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு (Sub-Registrar Office) செல்லுங்கள்.
அங்கு, தொலைந்துபோன பத்திரத்தின் நகல் (Certified Copy of Sale Deed) கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்குரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி, FIR நகல், பட்டா நகல், உங்கள் அடையாளச் சான்றுகள் போன்றவற்றை இணைத்து சமர்ப்பிக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்களின் நில பத்திரத்தை திரும்ப பெற நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை அணுகுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
நான் ஒரு வழக்கறிஞர். என்னிடம் பல முறை கேட்கப்பட்ட கேள்வி பட்டா இருக்கு பத்திரம் இல்லை இப்படி இருந்தால் என்ன செய்வது என்றுதான். பொதுவாக இப்படியான சூழலில் பலரும் நினைப்பது என்னவென்றால் பட்டா இருக்கிறது அதனால் நம் இடத்திற்கு எந்த பாதிப்பும் நேராது என்பதுதான். அது முற்றிலும் முட்டாள்தனம். இப்படியான சூழ்நிலையில்தான் பல பிரச்சனைகளை அது உண்டாக்கும்.
இடத்திற்கு பத்திரம் எவ்வளவு முக்கியம்?
நிலத்திற்கான பத்திரம் மிகவும் முக்கியம்.
பட்டா என்பது நிலத்தின் உரிமையாளருக்கு அரசு கொடுக்கும் அங்கீகார ஆவணமாகும்.
அதே சமயம் பத்திரம் என்பது நிலத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக பெற்ற ஆவணம் ஆகும்.
ஒரு நிலத்தை நீங்கள் வாங்க நினைத்தால் அதனை பத்திரப்பதிவு செய்தே வாங்க வேண்டும்.
நீங்கள் ஒரு இடத்தை விற்றால் இடத்தின் பத்திரத்தை சமர்பித்தே விற்க முடியும்.
உங்கள் நிலத்திற்கு ஒரு பிரச்சனை வந்தால் நீங்கள் பட்டாவை வைத்து சட்டப்பூர்வமாக நிரூபிக்க இயலாது.
எனவே, நிலத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த, நிலத்திற்கான பத்திரத்தை பதிவு செய்வது வைத்திருப்பது அவசியம்.
பத்திரம் ஆவணங்களை நல்ல வழக்கறிஞர் வைத்து சரிபார்க்க நோபுரோக்கரை அணுகவும்
Your Feedback Matters! How was this Answer?
பொதுவாக இடத்தின் உரிமையாளர் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் பத்திரத்தில் மட்டுமே இருக்கும். பட்டா என்பது வருவாய்த்துறையின் சான்று. ஆனால் பத்திரப்பதிவு மூலம் மட்டுமே நிலம் யாருக்கு சொந்தமானது என நிரூபிக்க முடியும். இப்படியான சூழலில் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். ஒருவேளை பட்டா இருக்கு பத்திரம் இல்லை என்றால் என்ன நேரிடும் என்பதை பார்ப்போம்
பத்திரம் இல்லாமல் இருப்பது என்ன விளைவை உண்டாக்கும்?
பத்திரத்தின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்.
பத்திரம் உங்களிடம் இல்லை என்றால் உங்களுக்கு அந்த இடத்தில் உரிமை இல்லை என்று அர்த்தம்.
பத்திரம் ஓர் இடத்தின் முக்கியமான ஆவணம், அந்த ஆவணத்தை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம், உரிமையாளருக்கு உண்டு.
சொத்தின் பத்திரம் இல்லை என்றால் அந்த சொத்தை வாங்கவோ விற்கவோ முடியாது.
இதற்கு எல்லாவற்றிற்கும் ஒரே வழி வழக்கறிஞரை சந்தித்து மாற்று பத்திரம் பெறுவது எப்படி என்று கேட்பதே நல்லது. இல்லையெனில் பிரச்சனை உங்களுக்கே. எனவே பத்திரத்தை பத்திரமாக வைத்திருங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை நல்ல வழக்கறிஞர் வைத்து சரிபார்க்க நோபுரோக்கரை அணுகவும்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
இடத்தின் பட்டா இருக்கிறது. ஆனால், பத்திரம் இல்லை என்ன செய்வது?
Nivedha45
226 Views
3
7 months
2025-05-14T22:27:01+00:00 2025-05-14T22:27:02+00:00Comment
Share