icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

அரசு இலவச நிலம் வாங்க வழி இருக்கிறதா?

view 186 Views

3

5 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-12-01T10:53:16+00:00

அரசு இலவச நிலம் பெறுவதற்கு நேரடியாக வழி இல்லை, ஆனால் அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் நிலம் பெறலாம். இது தவிர, வேறு எந்த வழியிலும் அரசு நிலத்தை சொந்தமாக வாங்க முடியாது.

இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் நிலம் பெறும் நடைமுறை

  1. தகுதி: சொந்த வீடு இல்லாத ஏழை குடும்பங்கள், அரசு புறம்போக்கு (போரம்போக்கு) நிலங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்து வந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் நிலம் பெற முடியும்.

  2. திட்டம்: தமிழக அரசு இந்த திட்டத்தை 2006 முதல் செயல்படுத்தி வருகிறது.

  3. பட்டா கிடைக்கும்: ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் நில ஆவணங்களை சரிபார்க்க நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்

0 2025-11-13T09:44:15+00:00

நான் ஒரு வழக்கறிஞர், பொதுவாக மக்களிடம் இருக்கும் ஒரு சந்தேகம் அரசு இலவச நிலம் வாங்க வழி இருக்கிறதா? அதற்கு பதில் என்னவென்றால் நேரடியாக அரசு இலவச நிலம் விற்காது. ஆனால், சில வகையான நிலங்களுக்காக நலத்திட்டங்கள், கரைச்சல் மற்றும் விவசாய நிதி உதவிகள் அரசாங்கத்தால் வழங்கப்படலாம்.

அரசு மூலம் இலவச நிலம் கிடைக்குமா?

  1. தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நிலங்கள் வழங்கப்படும்.

  2. இந்தியாவில் முழுமையாக இலவச நிலம் வாங்குவது மிகவும் அரிது.

  3. நேரடியாக இலவச நிலம் வாங்க முடியாது, ஆனால் சட்டப்படி குறைந்த விலையில் நிலம் பெறும் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், மற்றும் விவசாய உதவி வாய்ப்புகள் அளிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நிலம் மற்றும் பட்டா அவங்களை நோபுரோக்கர் சட்ட நிபுணர்கள் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்


0 2025-06-19T20:27:47+00:00

அரசு இலவச நிலம் வாங்க வழி இருக்கிறதா என்ற குழப்பம் உங்களுக்கு உள்ளதா அதற்கான பதில் கண்டிப்பாக வாங்கலாம். குறிப்பாக நமது அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு நிலம் வழங்கப்படும். மேலும், தாட்கோ போன்ற திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிலம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. 

இலவச நிலம் வாங்க வேண்டும்?

  1. பொதுவாக நீங்கள் இலவச வீட்டுமனை வாங்க அந்த புறம்போக்கு நிலத்தில் நீண்ட காலமாக வசித்திருக்க வேண்டும். அப்படி வசித்ததற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டு மனையை பெற்றுக்கொள்ளலாம்.

  2. மேலும், நீங்கள் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் எந்த மானியமும் பெற்றிருக்கக் கூடாது. அப்படி பெற்றிருந்தால் உங்களுக்கு அந்த நிலத்திற்கான பட்டா வழங்கப்படாது.

  3. தாட்கோ போன்ற அரசாங்கத்தின் திட்டம் மூலம் நீங்கள் நிலம் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் குறிப்பிட்ட சாதி மற்றும் வருமான வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். மேலும் அதற்குரிய சட்டபூர்வமான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

  4. இப்படி பல விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளுக்குள் நீங்கள் வந்தால் உங்களுக்கு கண்டிப்பாக இலவச வீட்டு மனை அரசாங்கத்தால் வழங்கப்படும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நிலம் ஆவணம் மற்றும் பட்டவை நோபுரோக்கர் லீகல் நிபுணர்கள் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners