icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பூஜை அறையில் மூன்று விளக்கு ஏற்றலாமா?

view 541 Views

3

8 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-12-01T10:56:02+00:00

ஆம், பூஜை அறையில் மூன்று விளக்குகள் ஏற்றலாம். விளக்குகளின் எண்ணிக்கையை விட உங்கள் பக்தி மற்றும் நம்பிக்கை முக்கியமானது. மேலும், நீங்கள் எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று முக்கியம். விளக்கு என்று திசை தெற்கு திசை தவிர மற்ற மூன்று திசைகளிலும் விளக்கு ஏற்றுவார்கள். 

  1. விளக்குகளின் எண்ணிக்கையை விட உங்கள் பக்தியின் நம்பிக்கையே முக்கியமானது.

  2. பூஜையின் நோக்கத்திற்கு ஏற்ப விளக்கின் எண்ணிக்கை அமைக்கப்படலாம். ஒரு விளக்கு இறைவனுக்கும், மற்றொன்று முன்னோர்களுக்கும் என்றழைத்து, பல நோக்கங்களுக்காக பல விளக்குகள் ஏற்றப்படலாம்.

  3. ஆகவே உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனை விலக்குவேண்டுமானாலும் ஏற்றலாம்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் பூஜை அறையை வாஸ்து ரீதியாக மாற்ற நோபுரோக்கர் இன்டீரியர் டீமை அணுகுங்கள்

1 2025-07-24T15:39:03+00:00

நான் ஒரு வாஸ்து நிபுணர். என்னிடம் பல கேள்விகள் வாஸ்துரீதியாக கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று பூஜை அறையில் மூன்று விளக்கு ஏற்றலாமா கூடாதா என்பதுதான். இதற்கான பதில் என்னவென்றால் பூஜை அறையின் எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். பொதுவாக பூஜை அறையில் காமாட்சி விளக்கு ஏற்றுவது வழக்கம். இல்லையெனில் குத்து விளக்கு ஏற்றுவார்கள். இது மட்டுமின்றி அகல்விளக்கு ஏற்றும் வழக்கமும் நம் மக்களிடையே உள்ளது. விளக்கு ஏற்றும் எண்ணிக்கை முக்கியமில்லை விளக்கேற்றும் முறையே முக்கியமானது. அதுவே நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் வல்லமை கொண்டது.

பூஜை அறையில் விளக்கேற்றும் முறை என்ன?

  1. பொதுவாக பூஜையில் அறையில் இருக்கும் விளக்குக்கு நல்லெண்ணெய் ஊற்றியே விளக்கு ஏற்ற வேண்டும். 

  2. முதலில் விளக்கில் நல்லெண்ணையை ஊற்றிய பிறகே திரியை வைப்பது நல்லது. ஆனால் ஒரு சிலர் திரியை போட்டு எண்ணெயை ஊற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அது சரியான முறை அல்ல.

  3. மேலும் நீங்கள் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்.

  4. முக்கியமாக தேய்காய் எண்ணெயில் விநாயகருக்கு விளக்கேற்றினால் கடன் தீரும் என்று நம்பிக்கையும் உள்ளது.

  5. மேலும் மிகவும் முக்கியமான ஒன்று காலையில் சூரிய உதயத்திற்கு ஆகும் முன் விளக்கு ஏற்ற வேண்டும். மாலையில் சூரியன் மறையும் முன் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி செய்வது நம் வாழ்க்கை ஒளிமயமாக்கும் ஆற்றலை கொண்டது என்றும் நம்பப்படுகிறது.

தற்போது உங்களுக்கு தேவையான தகவல் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

பூஜை அறையை வாஸ்து சாஸ்திரத்தின்படி மாற்றி அமைக்க ரெனோவேஷன் டீமை அணுகுங்கள்
0 2025-04-08T09:10:33+00:00

நானும் என் மனைவியும் ஒருநாள் கோவிலுக்கு சென்றபோது அங்கு இருந்த ஒரு சாமியாரிடம் அருள்வாக்கு பெற்றோம். அப்போது என் மனைவி பூஜை அறையில் மூன்று விளக்கு ஏற்றலாமா என்று கேட்டாள். அதற்கு அவர் எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றலாம் என்று கூறினார். ஆனால் வாஸ்து சாஸ்திரங்களின்படி பூஜை அறையில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது அதிர்ஷ்டத்தை தரும் என்று கூறினார்.

பூஜை அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?

இரண்டு விளக்குகள் பூஜை அறையில் ஏற்றினால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

  1. இரண்டு விளக்குக்கு மேல் உங்களால் ஏற்ற முடியும் என்றாலும் தாராளமாக ஏற்றலாம்.

  2. ஒருவேளை பூஜை அறையில் குத்து விளக்கு இல்லை என்றால் அகல் விளக்கு ஏற்றலாம்.

  3. விளக்கு ஏற்றும்போது பசு நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

  4. காலை, மாலை என இரு வேளைகளும் பூஜையறையில் விளக்கு ஏற்ற வேண்டும். 

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Get Dedicated Racks Crafted for Placing Kamakshi Deepam with NoBroker’s Carpentry

Read More:

Which Direction to Light Lamp in Pooja Room?

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners