icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பூஜை அறையில் கண்ணாடி வைப்பது நல்லதா கெட்டதா?

view 166 Views

3

9 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-12-01T10:51:45+00:00

பூஜை அறையில் கண்ணாடி வைப்பது நல்ல விஷயம். இது நேர்மறை ஆற்றலை அதிகரித்து, தீய சக்திகளை அகற்றி, முன்னோர்களின் அருளைப் பெற உதவுகிறது. கண்ணாடி முன் வைக்கும் தெய்வப் பிம்பத்தின் பிரதிபலிப்பு மூலம் தெய்வீக ஆற்றல் பெருகும். மேலும், கண் திருஷ்டி நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. 

  1. நேர்மறை ஆற்றல்: பூஜை அறையில் உள்ள கண்ணாடிகள், தெய்வத்தின் பிம்பம் பிரதிபலிப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

  2. தீய சக்திகளை அகற்றுதல்: இது வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றி, அமைதியான சூழலை உருவாக்க உதவுகிறது .

  3. முன்னோர்களின் அருள்: முன்னோர்களின் படங்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் , கண்ணாடி வைப்பது அவர்களை மகிழ்விக்கும் என்றும், அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாஸ்துப்படி உங்கள் பூஜை அறையை அலங்கரிக்க நோபுரோக்கர் இன்டீரியர் டீமை அணுகுங்கள்


0 2025-06-19T20:02:09+00:00

நான் வாஸ்து மீது மிகவும் நம்பிக்கை உடையவன். நான் வீட்டில் எந்த மாதிரியான பொருட்கள் வாங்கி வைத்தால் வீடு நன்றாக இருக்கும் என்று தேடித் தேடி வாங்கி வைப்பேன். அப்படி ஒருநாள் ஒரு ஜோசியர் என்னிடம் பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வழிபடுவது வீட்டிற்கும் நல்லது என்றார். எனக்கு பலநாள் இந்த சந்தேகம் இருந்தது. அதனை அந்த ஜோசியர் தீர்த்துவைத்தார். மேலும் பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா என்ற கேள்விக்கு பதில் கூறினார். அதனை உங்களுக்காக கூறுகிறேன்.

சாமி அறையில் கண்ணாடி வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

  1. பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுவதன் மூலம் நம் முன்னோர்கள், குலதெய்வம் அந்த கண்ணாடியில் தோன்றி நம்மை ஆசீர்வதிப்பர்.

  2. பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடும்போது அந்த கண்ணாடிக்கு பொட்டு வைத்து வழிபட வேண்டும்.

  3. மேலும், கண்ணாடி நேர்எதிர் சக்தியை உருவாக்குவதால் அது வீட்டின் நமையை நிலைநாட்டி, வீட்டின் வருமானத்தை பெருக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவிய இருக்கும் என்று நம்புகிறேன்.

வாஸ்து சாஸ்திரங்கள் படி உங்கள் வீட்டை மாற்றி அமைக்க நோபுரோக்கர் ரெனோவேஷன் டீமை அணுகுங்கள்

0 2025-03-23T23:14:27+00:00

பொதுவாக எனக்கு வாஸ்து சாஸ்திரங்கள் மேல் மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. அதனால் நான் எந்த வேலை செய்தாலும் வாஸ்து சாஸ்திரங்களின் வழியே செய்வேன். சமீபத்தில் நான் ஒரு ஜோதிடரிடம் பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் தாராளமாக வைக்கலாம் என்றும் மேலும் அதன் பலன்களையும் கூறினார். அதைப்பற்றி நான் உங்களுக்கு இப்பொழுது கூறுகிறேன்.

சாமி அறையில் கண்ணாடி வைப்பது நல்லதா கெட்டதா?

சாமி அறையில் கண்ணாடி வைப்பதால் விளையும் நன்மைகள்.

  1. பொதுவாக ஒரு நாள் வேலைகளை தொடங்குவதற்கு முன்பு சாமி கும்பிட்டுவிட்டே அந்நாளை தொடங்குவோம்.

  2. பூஜை அறையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் ஒரு இடமாகும்.

  3. பூஜை அறையில் சாமி படங்களையும் முன்னோர்கள் படங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். அதேபோல் வாஸ்துபடி கண்ணாடி வைத்து வணங்குவதால் நிறைய நன்மைகள் உண்டு.

  4. இப்படி கண்ணாடி வைத்து வணக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் செய்து வந்துள்ளனர்.

  5. பூஜை அறையில் கண்ணாடி வைத்து வணங்குவதால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்று நம்பப்படுகிறது.

  6. கண்ணாடி வைத்து வணங்குவதால் நம்முடைய முன்னோர்கள், குலதெய்வங்கள் கண்ணாடியில் தெரிவார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

  7. மேலும் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பவர்கள் கண்ணாடியில் பொட்டு வைத்து வணங்கினால் குலதெய்வம் கண்ணாடியில் காட்சியளிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

  8. மேலும் கண்ணாடியை பூஜை அறையில் வைத்து வணங்கினால் தீயசக்திகள் வீட்டை வீட்டு வெளியேறி நல்ல சக்திகள் வீட்டுக்கு வந்து சேரும்.

இந்த விவரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Enhance Your Space with Vastu-Friendly Solutions by Experts at NoBroker

Read More: 

How to Cover Mirror in Bedroom

 

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners